Friday, August 30, 2019

சிறந்த ஆசிரியர் பயிற்றுநர் விருது: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சிறந்த ஆசிரியர் பயிற்றுநருக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த விருதுக்கு செப்டம்பர் 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் சிறந்த முறையில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை கௌரவிக்கவும், ஊக்குவிக்கும் வகையிலும் தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், வாழ்த்து மடலையும் கொண்டது இந்த விருது.


இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முன்னர் ஆகஸ்ட் 16 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த கால அவகாசம் செப்டம்பர் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களை www.ncte.gov.in
இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News