Saturday, August 10, 2019

TNPSC, TRB, TET, NET, SLET, POLICE வினா விடை - பத்தாம் வகுப்பு இயல் 1 “அன்னை மொழியே”

பத்தாம் வகுப்பு
இயல் 1
அன்னை மொழியே
Ø   ‘அன்னை மொழியேஎன்ற கவிதையின் ஆசிரியர் யார்?
o   பாவலரேறு பெருஞ்சித்திரனார்
Ø  பெருஞ்சித்திரனார் எங்கு, எப்போது பிறந்தார்?
o   சேலம் மாவட்டம் சமுத்திரத்தில் 10.03.1933இல் பிறந்தார்.
Ø  பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
o   துரை. மாணிக்கம்
Ø  பெருஞ்சித்திரனாரின் சிறப்புப்பெயர் என்ன?
o   பாவலரேறு
Ø  பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் யாவை?
o   உலகியல் நூறு
o   பாவியக்கொத்து
o   நூறாசிரியம்
o   கனிச்சாறு
o   எண்சுவை எண்பது
o   மகபுக வஞ்சி
o   பள்ளிப் பறவைகள்
Ø  அன்னை மொழியேஎன்ற பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் இடம்பெற்ற நூல் எது?
o   கனிச்சாறு
Ø  தென்மொழி, தமிழ்ச்சிட்டு என்ற இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர்?
o   துரை. மாணிக்கம் (பெருஞ்சித்திரனார்)
Ø  யாரைத்தென்னன் மகளேஎனப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுகிறார்.
o   தமிழை
Ø  இன்னறும் பாப்பத்தேஎனப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவது?
o   பத்துப்பாட்டு
Ø  எண்தொகையே, நற்கணக்கே எனப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவது?
o   எண்தொகைஎட்டுத்தொகை
o   நற்கணக்கேபதினெண் கீழ்க்கணக்கு
Ø  நறுங்கனிஎனப் பாவலரேறு குறிப்பிடுவது?
o   தமிழ்மொழி
Ø  தென்னன் மகளே திருக்குறளின் மாண்புகழே
இன்னறும் பாப்பத்தே எண்தொகையே நற்கணக்கே
மன்னுஞ் சிலம்பே மணிமே கலைவடிவேஎன்ற பாடலடிகள் குறிப்பிடும் நூல்கள்?
o   திருக்குறளின் மாண்புகழே       -           திருக்குறள்
o   இன்னறும் பாப்பத்தே                  -           பத்துப்பாட்டு
o   எண்தொகையே                             -           எட்டுத்தொகை
o   நற்கணக்கே                                                -           பதினெண் கீழ்க்கணக்கு
o   மன்னுஞ் சிலம்பே                       -           சிலப்பதிகாரம்
o   மணிமே கலைவடிவே”             -           மணிமேகலை
Ø  பெருஞ்சித்திரனாரின் பெற்றோர்?
o   துரைசாமிகுஞ்சம்மாள்
Ø  தும்பிஎன்பதன் பொருள்.
o   வண்டு
Ø  தமிழ் எக்கண்டத்தில் அரசாண்டது?
o   குமரிக்கண்டம்
Ø  பாவலரேறுவின் எந்த நூல் தமிழக்குக் கருவூலமாக அமைந்தது?
o   திருக்குறள் மெய்ப்பொருளுரை
Ø  பாண்டிய மன்னனின் மகள் யார்?
o   தமிழ்
Ø  பெருஞ்சித்திரனார் கூறும்கடல்கொண்ட நாடுஎது?
o   குமரிக்கண்டம்
Ø  தென்னன் என்ற சொல் யாரைக் குறிப்பிடுகிறது?
o   பாண்டியனை
Ø  “சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும்’’, “என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” எனக் கூறியவர் யார்? . சச்சிதானந்தன்
Ø  பொருள் தருக.
o   தென்னன்                -           பாண்டியன்
o   கனி                            -           பழம்
o   எண்தொகை           -           எட்டுத்தொகை
o   தும்பி                         -           வண்டு
o   முந்துற்றோம்        -           முழங்குகின்றோம்
o   மாண்பு                      -           பெருமை
Ø  பிரித்து எழுதுக
o   செந்தமிழ்                -           செம்மை+தமிழ்
o   நற்கணக்கே                        -           நன்மை + கணக்கே
o   மண்ணுலகம்         -           மண் + உலகம்
o   புகழுரை                   -           புகழ் + உரை
o   உணர்வெழுப்ப       -           உணர்வு + எழுப்ப
o   பற்றுணர்வு             -           பற்று + உணர்வு
o   அழகார்ந்த               -           அழகு + ஆர்ந்த
o   நாட்டிடை                -           நாடு + இடை
o   பேரரசு                       -           பெருமை + அரசு
o   உள்ளுயிரே             -           உள் + உயிரே
Ø  எதிச்சொல் தருக
o   பழமை                      -           புதுமை
o   பெருமை                  -           சிறுமை
o   புகழ்                           -           இகழ்
Ø  இலக்கணக் குறிப்பு தருக.
o   நறுங்கனி                -           பண்புத்தொகை
o   எழுப்ப                       -           பெயரெச்சம்
o   சிறகார்ந்த                -           பெயரெச்சம்
o   செந்தமிழ்                -           பண்புத்தொகை
o   செந்தாமரை            -           பண்புத்தொகை
o   முந்துற்றோம்        -           தன்மைப்பன்மை வினைமுற்று
o   குடித்து                     -           வினையெச்சம்
o   கன்னிக்குமரி         -           உருவகம்
o   மன்னுலகம்                       -           உருவகம்
o   தென்னன் மகள்     -           இரண்டாம் வேற்றுமைத் தொகை
o   வாழ்த்துவோம்      -           தன்மைப் பன்மை வினைமுற்று
o   முகிழ்ந்த                 -           பெயரெச்சம்
o   நறுங்கனி                -           பண்புத்தொகை
o   பேரரசு                       -           பண்புத்தொகை
o   யாண்டும்                 -           முற்றும்மை
o   நின் பெருமை         -           ஆறாம் வேற்றுமைத் தொகை




Popular Feed

Recent Story

Featured News