Join THAMIZHKADAL WhatsApp Groups
பத்தாம் வகுப்பு
இயல் 1
“அன்னை மொழியே”
Ø
‘அன்னை மொழியே’ என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
o
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
Ø
பெருஞ்சித்திரனார் எங்கு, எப்போது பிறந்தார்?
o
சேலம் மாவட்டம் சமுத்திரத்தில் 10.03.1933இல் பிறந்தார்.
Ø
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
o
துரை. மாணிக்கம்
Ø
பெருஞ்சித்திரனாரின் சிறப்புப்பெயர் என்ன?
o
பாவலரேறு
Ø
பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் யாவை?
o
உலகியல் நூறு
o
பாவியக்கொத்து
o
நூறாசிரியம்
o
கனிச்சாறு
o
எண்சுவை எண்பது
o
மகபுக வஞ்சி
o
பள்ளிப் பறவைகள்
Ø
‘அன்னை மொழியே’ என்ற பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் இடம்பெற்ற நூல் எது?
o
கனிச்சாறு
Ø
தென்மொழி, தமிழ்ச்சிட்டு என்ற இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர்?
o
துரை. மாணிக்கம் (பெருஞ்சித்திரனார்)
Ø
யாரைத் ‘தென்னன் மகளே’ எனப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுகிறார்.
o
தமிழை
Ø
‘இன்னறும் பாப்பத்தே’ எனப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவது?
o
பத்துப்பாட்டு
Ø
எண்தொகையே, நற்கணக்கே எனப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவது?
o
எண்தொகை – எட்டுத்தொகை
o
நற்கணக்கே – பதினெண் கீழ்க்கணக்கு
Ø
‘நறுங்கனி’ எனப் பாவலரேறு குறிப்பிடுவது?
o
தமிழ்மொழி
Ø
“தென்னன் மகளே திருக்குறளின் மாண்புகழே
இன்னறும் பாப்பத்தே எண்தொகையே நற்கணக்கே
மன்னுஞ் சிலம்பே மணிமே கலைவடிவே” என்ற பாடலடிகள் குறிப்பிடும் நூல்கள்?
o
திருக்குறளின் மாண்புகழே - திருக்குறள்
o
இன்னறும் பாப்பத்தே - பத்துப்பாட்டு
o
எண்தொகையே - எட்டுத்தொகை
o
நற்கணக்கே - பதினெண் கீழ்க்கணக்கு
o
மன்னுஞ் சிலம்பே - சிலப்பதிகாரம்
o
மணிமே கலைவடிவே” - மணிமேகலை
Ø
பெருஞ்சித்திரனாரின் பெற்றோர்?
o
துரைசாமி – குஞ்சம்மாள்
Ø
‘தும்பி’ என்பதன் பொருள்.
o
வண்டு
Ø
தமிழ் எக்கண்டத்தில் அரசாண்டது?
o
குமரிக்கண்டம்
Ø
பாவலரேறுவின் எந்த நூல் தமிழக்குக் கருவூலமாக அமைந்தது?
o
திருக்குறள் மெய்ப்பொருளுரை
Ø
பாண்டிய மன்னனின் மகள் யார்?
o
தமிழ்
Ø
பெருஞ்சித்திரனார் கூறும் ‘கடல்கொண்ட நாடு’ எது?
o
குமரிக்கண்டம்
Ø
தென்னன் என்ற சொல் யாரைக் குறிப்பிடுகிறது?
o
பாண்டியனை
Ø
“சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும்’’, “என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” எனக் கூறியவர் யார்? க. சச்சிதானந்தன்
Ø
பொருள் தருக.
o
தென்னன் - பாண்டியன்
o
கனி - பழம்
o
எண்தொகை - எட்டுத்தொகை
o
தும்பி - வண்டு
o
முந்துற்றோம் - முழங்குகின்றோம்
o
மாண்பு - பெருமை
Ø
பிரித்து எழுதுக
o
செந்தமிழ் - செம்மை+தமிழ்
o
நற்கணக்கே - நன்மை + கணக்கே
o
மண்ணுலகம் - மண் + உலகம்
o
புகழுரை - புகழ் + உரை
o
உணர்வெழுப்ப - உணர்வு + எழுப்ப
o
பற்றுணர்வு - பற்று + உணர்வு
o
அழகார்ந்த - அழகு + ஆர்ந்த
o
நாட்டிடை - நாடு + இடை
o
பேரரசு - பெருமை + அரசு
o
உள்ளுயிரே - உள் + உயிரே
Ø
எதிச்சொல் தருக
o
பழமை - புதுமை
o
பெருமை - சிறுமை
o
புகழ் - இகழ்
Ø
இலக்கணக் குறிப்பு தருக.
o
நறுங்கனி - பண்புத்தொகை
o
எழுப்ப - பெயரெச்சம்
o
சிறகார்ந்த - பெயரெச்சம்
o
செந்தமிழ் - பண்புத்தொகை
o
செந்தாமரை - பண்புத்தொகை
o
முந்துற்றோம் - தன்மைப்பன்மை வினைமுற்று
o
குடித்து - வினையெச்சம்
o
கன்னிக்குமரி - உருவகம்
o
மன்னுலகம் - உருவகம்
o
தென்னன் மகள் - இரண்டாம் வேற்றுமைத் தொகை
o
வாழ்த்துவோம் - தன்மைப் பன்மை வினைமுற்று
o
முகிழ்ந்த - பெயரெச்சம்
o
நறுங்கனி - பண்புத்தொகை
o
பேரரசு - பண்புத்தொகை
o
யாண்டும் - முற்றும்மை
o
நின் பெருமை - ஆறாம் வேற்றுமைத் தொகை