Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 29, 2019

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருக்குமா?


தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அதற்கான உத்தரவை தமிழக பள்ளி கல்வித்துறை பிறப்பித்தது.


ஆனால், இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, 3 ஆண்டுகளுக்கு இந்த உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பின்னர் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஆனால், இதுகுறித்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு எந்தவித சுற்றறிக்கையும் அனுப்பவில்லை. இதனால்தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருக்குமா? என்பது குழப்பத்தில் இருக்கிறது