Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 25, 2019

உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது ஏன்?


கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமான சரிந்துள்ளதாக ஒரு புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2018-19 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 310 பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வறிக்கையில், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி படிப்புகளில், மாணவர் சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த 2014-15 ஆண்டில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் 42 லட்சத்து 54 ஆயிரத்து 919 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால் கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 37 லட்சத்து 70 ஆயிரத்து 949 ஆக குறைந்துள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில், இதே கால கட்டங்களில், 98 லட்சத்து 69 ஆயிரத்து 520 ஆக இருந்த மாணவர்கள் சேர்க்கை, 91 லட்சத்து 98 ஆயிரத்து 205 ஆக குறைந்துள்ளது. அதேபோல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 71.1 சதவீதமாகவும், மாணவிகளின் சேர்க்கை 28.9 சதவீதமாகவும் உள்ளது.ஆனால் முதுகலை பட்டப்படிப்பிற்குப் பின் 9.4 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆய்வு படிப்பிற்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது.



தேசிய அளவில் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் உத்தரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் மாணவிகள் அதிகளவில் உயர்கல்விக்கு செல்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக்கும்.

No comments:

Post a Comment