Thursday, April 16, 2020

தமிழகத்தில் வங்கிகள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும்


சென்னை: வாடிக்கையாளர்களின் வருகை குறைந்திருப்பதால் மே 3ம் தேதி வரை வங்கிகள் இனி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'முதற்கட்ட ஊரடங்கின் போது வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையில் வங்கிகளுக்கு வந்ததன் காரணமாக மாலை 4 மணி வரை வங்கிகள் செயல்பட்டு வந்தன. தற்போது மே., 3 வரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படுவதால் வாடிக்கையாளர்கள் வருகை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 மணிக்கே பெரும்பாலானோர் தங்களது வங்கிப் பணிகளை முடித்துக் கொள்வார்கள்' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News