Join THAMIZHKADAL WhatsApp Groups
மேற்கண்ட பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழகத் தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் விடைத் தாள் திருத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டு , அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுப டுத்தப்பட இருந்தனர் . ஊரடங்கு முடிந்த பிறகு இந்த பணியை தொடங்க லாம் என்று தேர்வுத்துறை முடிவு செய்தது .
இந்நிலையில் , மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பதால் , 29ம் தேதிக்கு பிறகு விடைத்தாள் திருத் தும் பணியை தொடங்க தேர்வுத்துறை திட்ட மிட்டுள் ளது . ஆனால் , விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு ஆசிரியர் கள் வருவதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை . அதனால் வீடுக ளில் இருந்தே ஆசிரியர் கள் விடைத்தாள் திருத்த வைக்க ஆலோசிக்கப்பட் டது .ஆனால் அது குறித்து இன்னும் முடிவு செய்யப் படவில்லை . மேலும் , விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு
ஆசிரியர்கள் வந்தால் , ஒரு அறையில் குறைந்தபட்சம் 10 ஆசிரியர்கள் அமர்ந்து விடைத்தாள் திருத்த வேண்டிய நிலை ஏற்படும் . அங்கு கண்காணிப்பு பணியில் இருவர் இருக்க வேண்டும் . திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரி யர்களுக்கு தேவையான எழுது பொருட்கள் உள் ளிட்டவற்றை எடுத்துவர ஒரு வர் தேவை . இதனால் சமூக இடைவெளி இல்லாமல் போகலாம் என்பதால் , ஆசிரியர்கள் வருவதில் சிக்கில் நீடிக்கிறது . அத னால் , ஊரடங்கு குறித்து அரசு தெளிவான முடிவு எடுத்து அறிவித்தால் தான் விடைத் தாள் திருத்தும் பணி தொடங் கும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் .
ஆனால் , 29ம் தேதிக்கு பிறகு இந்த பணியை தொடங்குவது என்பதில் தேர்வுத்துறை தீவிரமாக இருக்கிறது .
No comments:
Post a Comment