வயிற்று வலி ஏற்பட்டால் ஒருபிடி கறிவேப்பிலையை, புளித்த மோரிலோ, சுடுநீரிலோ அரைத்து பருகுங்கள். சிறிதளவு கடுகு எண்ணெய்யை சூடாக்கி தொப்புளை சுற்றி தேய்த்தாலும் வலி நீங்கும்.
கறிவேப்பிலை துளிரை மென்று சாப்பிட்டால் மலத்தில் ரத்தமும், சளியும் வெளியேறுவது நிற்கும். இந்துப்பூ, சீரகம், அதிமதுரம், திப்பிலி, சுக்கு, கடுக்காய்தோடு ஆகியவைகளை தூளாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை சிறிதளவு வெல்லத்தில் கலந்து சாப்பிட்டால் அஜீரணம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
No comments:
Post a Comment