Thursday, May 21, 2020

10- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ஜூலை மாதம் ஒத்திவைக்க வேண்டுமென திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு


சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். 10- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ஜூலை மாதம் ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அமைச்சருடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், "கரோனா பாதிப்பு சீராகி இயல்பு நிலை திரும்பும்போது 10- ஆம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டும். 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் கூறினார். கல்வி முக்கியம்தான், அதைப்போல உயிரும் முக்கியம்" என்றார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News