Saturday, May 9, 2020

ஜூன் மாத இறுதியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு


சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: பொதுத் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக உயர்மட்டக் குழு கூட்டம் நடக்க நடத்தப்பட உள்ளது. அந்த கூட்டத்துக்கு பிறகு, ஜூன் மாத இறுதிக்கு பிறகு தேர்வுக் கால அட்டவணையை அறிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த டிவிட்டர் செய்தி மூலம் பத்தாம் வகுப்பு தேர்வு ஜூலை மாதம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News