Monday, May 11, 2020

காஞ்சிபுரம் மாவட்டம்,பெருநகர் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 165 மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் கொடுத்து உதவிய ஆசிரியர்கள்


காஞ்சிபுரம் மாவட்டம்,பெருநகர் -அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இன்று 11.05.2020(திங்கள் கிழமை காலை பள்ளி ஆசிரிய-ஆசிரியைகளால் 165 மிகவும் சிரமப்படும் மாணவர்களின் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு (ரூ 750) அரிசி(12கிலோ),பருப்பு உள்ளிட்டமளிகைப்பொருள்கள்,எண்ணை உள்ளிட்டவற்றை (ரூபாய் 1.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள்)முகக்ககவசம் அளித்து,கிருமி நாசினி வழங்கி-போதிய சமூக இடைவெளியோடு, கொரோணா விழிப்புணர்வுகளோடு தலைமையாசிரியை திருமதி எம்.மாலதி தலைமையில்,முதன்மைக்கல்வி அலுவரின் நேர்முக உதவியாளர் திரு ராஜ்குமார்,பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் திரு ஏ.ஜெயவேல் முன்னிலையிலும் "காஞ்சிபுரம், முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அவர்கள்" 165-பெற்றோர்களுக்கும் வழங்கினார்.இந்நிகழ்வில் பள்ளியின் அனைத்து ஆசிரிய,ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.அனைத்து பெற்றோர்களும் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News