Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 1, 2023

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வு.! தீவிரமாக கண்காணிக்க உத்தரவு.!

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறைத் தேர்வு தொடங்க உள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை 4, 10, 308 மாணவர்களும், 4, 41, 173 மாணவிகளும், ஒரு திருநங்கை என 8, 51, 482 பேர் எழுத உள்ளனர். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வினை 3, 67, 535 மாணவர்களும், 4, 20, 242 மாணவிகளும், 6 திருநங்கை என 7, 87, 783 பேர் மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரையில் எழுத உள்ளனர்.

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வுகள் இன்று முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படும்போது, வேறு பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment