Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 5, 2023

ஆசிரியர் மற்றும் உள்துறை பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு - அறநிலையத் துறை அறிவிப்பு.



திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கேயிலில் காலியாக உள்ள வெளித்துறை, தொழில்நுட்பம், ஆசிரியர் மற்றும் உள்துறை பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்து மதத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.வெளித்துறை பணியிடங்கள்

பணி: தட்டசர்

காலியிடங்கள்: 6

சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பிரிவில் இளநிலை, உயர்நிலை தேர்ச்சி, கணினி பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.




பணி: நூலகர்

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நூலகப் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.




பணி: கூர்க்கா

காலியிடங்கள்: உபகோயில் 2

சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.




பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 65

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.




பணி: உபகோயில் பல வேலை

காலியிடங்கள்: 26

சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.




பணி: உதவி சமையல்

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருப்பதுடன் உணவு சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.




பணி: ஆயா

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.




பணி: பூஜை காவல்

காலியிடங்கள்: மலைக்கோயில் - 1

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

உபகோயில் - 9

சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.




பணி: காவல்

காலியிடங்கள்: மலைக்கோயில் - 50

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.




பணி: பாத்திர சுத்தி

காலியிடங்கள்: மாலைக்கோயில் - 1

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.




2. தொழில்நுட்ப பணியிடங்கள்

பணி: கணினி பொறியாளர் - 1

தகுதி: கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.




பணி: இளநிலை பொறியாளர் - 1

தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500




பணி: வரைவாளர்(சிவில்) - 1

பணி: வரைவாளர்( மின்னியியல்) - 1

தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500




பணி: தொழில்நுட்ப உதவியாளர்(மின்) - 1

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.




பணி: எச்.டி ஆப்ரேட்டர் - 5

சம்பளம்: மாதம் ரூ.18,200 - 57,900

தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்து, எலக்ட்ரிக்கல் பிரிவில் பி சான்றிதழ் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.




பணி: பம்ப் ஆப்ரேட்டர் - 6

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900




பணி: பிளம்பர் - 15

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900




பணி: தண்ணீர் சுத்திகரிப்பு நிலைய இயக்குபவர் - 2

சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400




பணி: பிட்டர் - 3

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900




பணி: வின்ச் மெக்கானிக் - 1

பணி: வின்ச் ஆப்ரேட்டர் - 8

பணி: மிசின் ஆப்ரேட்டர் - 5

பணி: டிராலிகார்டு - 9

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400




பணி: ஓட்டுநர் - 4

சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன், இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் அனுபவம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.




பணி: நடத்துநர் - 5

சம்பளம்: மாதம் ரூ.16,600 - 50,400

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் நடத்துநர் தகுதி சான்றிதழ் பெற்றிருப்பதுடன் முதல் உதவி உதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.




பணி: கிளீனர் - 1

சம்பளம்: 15,700 - 50,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் வாகனம் பழுதுபார்ப்பதில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.




பணி: மருத்துவர் - 2

சம்பளம்: மாதம் ரூ.36,700 - 1,16,200

தகுதி: மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்திரிக்க வேண்டும்.




பணி: எப்.என்.ஏ - 1

பணி: எம்.என்.ஏ - 1

சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

தகுதி: மேல்நிலை தேர்ச்சியுடன் சுகாதார பணியாளர்

சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.




பணி: சுகாதார ஆய்வாளர் - 1

சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,12,800

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.




பணி: வேளாண் அலுவலர் - 1

சம்பளம்: மாதம் ரூ. 35,900 -1,13,500

தகுதி: விவசாயம் அல்லது தோட்டக்கலை பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.




3. ஆசிரியர் பணியிடங்கள்

பணி: ஆசிரியை

காலியிடங்கள்: 16

(தமிழ் 4, ஆங்கிலம் 2, கணிதம் 2, வரலாறு 2, இயற்பியல் 1, வேதியியல் 1, உயிரியல் 1, இசை 1, உடற்கல்வி ஆண் 1, பெண் 1)

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000




பணி: ஆய்வக உதவியாளர் - 1

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை பார்த்து தெரிந்துகொள்ளவும்.




பணி: வேதபாட சாலை(சிவ ஆகம ஆசிரியர்) - 1

சம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400




பணி: தேவார ஆசிரியர் - 1

சம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400




தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மற்றும் ஏதாவதொரு ஆகம பள்ளியில் மூன்று ஆண்டு ஆகம், தேவாரம் படித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.




4. உள்துறை பணியிடங்கள்

பணி: நாதஸ்வரம்

காலியிடங்கள்: 3




பணி: தவில்

காலியிடங்கள்: 3




பணி: தாளம்

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000




தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருப்பதுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.




பணி: அர்ச்சகர்கள்(உபகோயில்)

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் 1 ஆண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.




வயதுவரம்பு: 1.7.2022 ஆம் தேதியின்படி 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருக்க வேண்டும்.




ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை: www.hrce.tn.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து நேரிலோ, தபால் மூலமாகவோ கீழ்வரும் அஞ்சல் முகவரியில் சமர்பிக்க வேண்டும்.




பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி - 6234 601




பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 7.4.2023




மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்....

No comments:

Post a Comment