Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 31, 2023

10ம் வகுப்பு தேர்ச்சியானவர்களுக்கு ரயில்வேயில் 680 காலிப்பணியிடங்கள்! ஆகஸ்ட் 30 கடைசி தேதி

Railway Recruitment Cell எனப்படும் RRC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் Assistant Loco Pilot , Technician, Junior Engineer & Train Manager பணிக்கென காலியாக உள்ள 689 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Loco Pilot , Technician, Junior Engineer & Train Manager பணிக்கென காலியாக உள்ள 689 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி :

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, டிகிரி என பணிக்கு தோடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



வயது வரம்பு :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 47 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம் :

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு 7th CPC Pay Level 2 முதல் 6 வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Medical Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடைசி தேதி :

30.08.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது அகவே இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் இருக்கிறது மிஸ்பண்ணிடாதிங்க!

No comments:

Post a Comment