Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 26, 2023

எலும்பு பிரச்சனை முதல் அஜீரணம் வரை உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஒரே மூலிகை!

பிரண்டை பிரண்டை எலும்பு முறிவுகளை சரிசெய்ய பெரும்பாலும் பயன்படும் மூலிகையாகும். இதன் சாற்றை தினமும் இரண்டு முறை 20 மில்லி லிட்டர் பருகுவதன் மூலம், எலும்பு முறிவு விரைவில் குணமடையும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.மேலும், எலும்பு தாது அடர்த்தி குறைவு, எலும்புத் துளை நோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் எலும்பு வலிமையை மறுசீரமைக்கவும் பிரண்டை உதவும்.

பிரண்டை தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெளிப்புறம் தடவினால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.

பிரண்டையின் இலைகள் மற்றும் தண்டுகள் எலும்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும்.

பிரண்டையின் இதர மருத்துவ பலன்கள்

உடல் பருமன்

பிரண்டையில் ஆன்டி ஆக்சிடெண்ட் உள்ளதால், எடை குறைப்பு தன்மை இதில் அதிகம் உள்ளது. இது உடல் கொழுப்பை குறைத்து, ஒட்டுமொத்த கொழுப்பு தன்மையை மேம்படுத்துகிறது.பிரண்டை வளர்சிதையை அதிகரித்து உடலின் கொழுப்பு அளவைக் குறைக்கும். இதனால் உடலில் உகந்த அளவு கொழுப்பு சேர்க்கப்பட்டு, எலும்பு வலிமையை அதிகரிக்க உதவும்.

இதனால் எலும்பின் எடையும் அதிகரிக்கும். இதனால் அடிவயிறு, இடுப்பு, பிட்டம், தொடை போன்ற இடத்தில் படியும் கொழுப்பு குறிப்பிட்ட அளவு குறைக்கிறது. பெரும்பலான சந்தர்ப்பங்களில், அங்குல இழப்பு மற்றும் வயிற்று கொழுப்பு குறைப்பு ஆகியவை கண்காணிக்கப்படுகின்றன.

மூட்டு வலி

பிரண்டையில் அயோடின் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது. இதனால் மூட்டுகளில் உண்டாகும் அழற்சி மற்றும் வலி குறையும். விளையாட்டு வீரர்களுக்கு கடின பயிற்சியால் உண்டாகும் வலியை குறைக்கவும் பிரண்டை உதவும்.

செரிமானம்

செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள், பிரண்டையின் இலைகளை துவையலாக அரைத்து அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தால் செரிமானம் சீராக நடைபெறும். மேலும், பிரண்டையின் தண்டுகளை தூளாக்கி அதனுடன், சம அளவு இஞ்சி தூள் சேர்த்து தயாரிக்கும் மருந்தானது, பசியின்மைக்கு தீர்வாக அமையும்.

கீல்வாதம்

கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டையை பயன்படுத்தினால் சிறந்த தீர்வு கிடைப்பதுடன், அழற்சியையும் குறைக்கும். ஏனெனில், மூட்டு இயக்கத்தை மேம்படுத்த பிரண்டை ஒரு துணை மருந்தாகும்.

கிரந்தி நோய்

பிரண்டை தண்டை எரிந்துகொண்டிருக்கும் கரியில் சில நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு அதிலிருந்து எடுக்கப்படும் 20 மில்லி லிட்டர் சாறுடன், 20 மில்லி லிட்டர் நெய் சேர்க்க வேண்டும்.அதனை உணவிற்கு பிறகு ஒரு நாளில் இரண்டு முறை என, தொடர்ந்து 7 நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம், கிரந்த நோய் பாதிப்பு நீங்கும்.

மாதவிடாய் காலத்தில் அதிகரித்த ரத்தபோக்கை குறைக்க, 20 மில்லி லிட்டர் பிரண்டை தண்டு சாற்றுடன், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் மூன்று கிராம் வெள்ளை சந்தனத் தூள் ஆகியவற்றை சேர்த்து பருக வேண்டும்.

பல் ஈறு

பிரண்டை சாற்றைக் கொண்டு வாய் கொப்பளிப்பதன் மூலம், பல் ஈறு குருதிக் கசிவு மற்றும் பல் ஈறுகளில் உண்டான அழற்சி போன்றவை குறையும். பற்களில் படிந்திருக்கும் சீமை சுண்ணாம்பை சுத்தமாக்கும். மேலும், பிரண்டையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை காரணமாக பற்களில், நுண்ணுயிர் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment