Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 3, 2023

பதவி உயர்வு பணிகளை நிறுத்த அமைச்சருக்கு ஆசிரியர்கள் கடிதம்

பணி மேம்பாட்டு பதவி உயர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால், பதவி உயர்வு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்' என, அமைச்சர் பொன்முடிக்கு, அண்ணா பல்கலை ஆசிரியர்கள் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது.

கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலை இரண்டு மாதங்களுக்கு முன் நடத்திய பணி மேம்பாட்டு பதவி உயர்வு தேர்வில், முக்கிய துறைகளில் இருந்து பங்கேற்றவர்களில், 40 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதில் குளறுபடி நடந்துள்ளதாக ஏற்கனவே புகார் அளித்தும், பதவி உயர்வு நடைமுறை தொடர்கிறது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிப்படி, ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில், பதவி உயர்வு வழங்க வேண்டும்.

நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம், அவர்களின் துறை சாராத கேள்விகளை கேட்டுள்ளனர். ஆசிரியர்களின் கற்பித்தல் அனுபவத்துக்கும் உரிய மதிப்பெண் வழங்கவில்லை.

எனவே, உரிய விதிப்படி நடக்காத பதவி உயர்வு நடைமுறையை உடனே நிறுத்த வேண்டும். புதிதாக பேராசிரியர் நியமனம் செய்வதையும் தற்காலிகமாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பணி மேம்பாட்டு பதவி உயர்வு முறையில் குளறுபடிகள் நடந்துள்ளதா என்பதை விசாரிக்க, ஏற்கனவே, தமிழக உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் பழனிச்சாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment