Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 26, 2023

ரத்தம் சுத்தமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கிட்னியை புதுப்பிக்க அருமையான மூலிகை இதோ!!

உடம்பில் ஏற்படக்கூடிய பலவிதமான நோய்களை தீர்க்கும் ஒரு அற்புதமான மூலிகை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

பல நோய்களுக்கு தீர்வாக இருக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த மூலிகை தான் முள்சங்கன். அந்த காலத்தில் சித்தர்கள் பயன்படுத்திய ஒரு அருமையான மருந்து தான் இந்த மூலிகை. இந்த மூலிகையினுடைய வேர்கள் பழங்கள் இலைகள் என அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது.

பயன்கள்:

இந்த முள்சங்க நிலையில் ஒரு பத்து இலையை எடுத்து அதனுடன் அரை ஸ்பூன் சீரகம் மற்றும் எட்டு மிளகு சேர்த்து அரைத்து ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்த பின்னர் அதிலிருந்து 20ml குடித்தாலே போதும் எப்பேர்ப்பட்ட காய்ச்சலாக இருந்தாலும் நொடியில் குணமாகும். இந்த கசாயத்தை பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் குடித்து வரலாம். ஆனால் அளவு மட்டும் சிறிது மாறுபடும்.

இந்த முள் சங்கனின் பழங்கள் இயற்கையாகவே இரத்தத்தை சுத்திகரிக்க கூடிய ஆற்றல் வாய்ந்தது. எனவே இந்த பழத்தை இரண்டு அல்லது மூன்று சாப்பிட்டு வர உடம்பில் ரத்தம் நன்கு சுத்திகரிப்பு ஆகும்.

இந்த முழுசங்கனின் இலைகள் பெயர்கள் பழங்கள் காய்கள் என அனைத்திற்குமே கிருமிகளை கொள்ளக்கூடிய ஆற்றல் இயற்கையாகவே நிறைந்து உள்ளது. இதனால்தான் எந்த ஒரு தீராத காய்ச்சலாக இருந்தாலும் அதாவது தீராத ஜுரம் வைரஸ் காய்ச்சல் போன்ற எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் அதை எதிர்க்கக்கூடிய எதிர்பாற்றல் இதில் உள்ளது.

மேலும் இந்த முள் சங்கன் மூலிகையின் வேரை எடுத்து அதனுடன் எட்டு மிளகு சேர்த்து அம்மியில் அரைத்து அதை காலையில் மூன்று சுண்டைக்காய் அளவில் உருண்டை பிடித்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர விஷக்கடிகள் அனைத்தையும் குணப்படுத்தும். குறிப்பாக வெறிநாய்க்கடி போன்ற பல விஷக்கடிகளுக்கு மருந்தாக இன்றளவும் பயன்பட்டு வருகிறது.

இந்த மூலிகை காய்ச்சலை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ரத்த சீர்கேடு இருந்தாலும் குணப்படுத்தும். மேலும் உடலை நன்கு ஒருநிலைப்படுத்தக்கூடியது மற்றும் தேக வன்மை போன்ற நிலைபாடுகளுக்கெல்லாம் நிலை கொடுக்கக் கூடியது தான் இந்த முள் சங்கன் மூலிகை.

மேலும் சிறுநீரகம் சார்ந்த கழிவுகளை வெளியே கொண்டு வரக்கூடிய சக்தி இந்த மூலிகைக்கு உள்ளது. அதாவது இந்த முழு சங்க நிலையில் 5 இலைகளை எடுத்து அதனுடன் சிறு நெருஞ்சில் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர சிறுநீரகம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக சரியாகும்.

No comments:

Post a Comment