Sunday, July 23, 2023

வருமானம் இல்லாத இல்லத்தரசிகள் கூட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா?

நாட்டின் நிதி ஆதாரங்கள் என்று பார்க்கும்போது பிரதானமாக இருப்பது வரி தான். தனி மனித வரி முதல் பெரிய தொழிற்சாலைகளின் வரி வரை எல்லாமே நாட்டின் வருமானத்திற்கு பங்களிக்கிறது.

அதில் ஒரு சில விஷயங்கள் நமக்கு தெரியும். பல விதிகள் நமக்கு தெரியாது. அப்படியா ஒன்றை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் ஆண்டுதோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வருமான வரித்துறை நிர்ணயம் செய்யும். குறிப்பாக வரிக்கு உட்பட்ட வருமானம் விலக்குகள் மற்றும் விலக்குகள் மூலம் குறைக்கப்படும் போது பலர் வரிக் கணக்கை தாக்கல் செய்வதில்லை.

ஆனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஐடிஆர் தாக்கல் செய்வது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக வருமானம் இல்லாத இல்லத்தரசிகளும் ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயம் என்கின்றனர். இதற்கான காரணங்கள் மற்றும் பலன்களை முழுமையாக தெரிந்து கொள்வோம்.

எப்போது கட்டாயம்?

இல்லத்தரசிகளுக்கு தனிப்பட்ட வருமானம் இல்லாமல் இருக்கலாம். அதன் காரணமாக அவர்கள் ஐடி ரிட்டர்ன்களை தாக்கல் செய்யாமல் இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் கணவன் அல்லது எந்த குடும்ப உறுப்பினரும் வருமானம் இல்லாத இல்லத்தரசிக்கு வருமானம் ஈட்ட முதலீடு செய்யலாம். பொதுவாக, சில இல்லத்தரசிகள் வேலை அல்லது முதன்மை வருமான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் FD வட்டி மற்றும் வாடகை மூலம் வருமானம் பெறுகிறார்கள்.

அத்தகைய நபர்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். திருத்தப்பட்ட வரி முறையின்படி, குடும்பங்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், அவர்களுக்கு வரி பொருந்தாது. சூப்பர் மூத்த குடிமக்களுக்கு (80 வயது அல்லது அதற்கு மேல்) ரூ.5 லட்சம் வரை வரி பொருந்தாது. மற்றவர்கள் தங்கள் வருமான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதலீடு:

பெற்றோரோ அல்லது கணவரோ இல்லத்தரசியின் பெயரில் பணத்தை முதலீடு செய்தால், வருடக்கணக்கில் முதலீட்டுத் தொகை பெரிய அளவில் வளரும். இந்த வருமானம் வரிக்குரியதாக இருந்தால், வரி விதிகளின்படி இல்லத்தரசி ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் குடும்பத்தின் நிதிச்சுமையைக் குறைப்பதற்கும் இது முக்கியமானது.


நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி மற்றும் பிற முதலீடுகளின் வருமானம் பொருந்தக்கூடிய வரி விகிதங்களில் வரி விதிக்கப்படும். மொத்த வட்டி வருமானம் ரூ.2.5 லட்சத்தை தாண்டினால், இல்லத்தரசி ஐடி ரிட்டன் (ஐடிஆர்) தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல், வேறு ஏதேனும் முதலீடு விலக்கு வரம்பை விட அதிகமாக வருமானம் ஈட்டினால், ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். சில சந்தர்ப்பங்களில் உறவினர்களிடமிருந்து பெறப்படும் பரிசுகளுக்கு வரி பொருந்தாது. பரிசின் விலையைப் பொருட்படுத்தாமல் இந்த விதி பொருந்தும்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

எளிய கடன் ஒப்புதல்:

வருமானம் இல்லாத இல்லத்தரசிகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ITR தாக்கல் செய்தால், வங்கிக் கடன் பெறுவது எளிதாகிவிடும். குறிப்பாக பெண்களின் பெயரில் வீட்டுக் கடன் வாங்கும்போது ஐடிஆர் தாக்கல் செய்வது நன்மை பயக்கும். ஐடிஆர் அடிப்படையில் வங்கிகள் குறைந்த வட்டி விகிதங்களை வழங்கலாம். இதன் மூலம் ஐடிஆர் வருமான ஆதாரமாக செயல்படுகிறது.

விசா:

வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் இல்லத்தரசிகளுக்கு அந்த ப்ராஸசை எளிதாக்க இந்த வருமான வரி கணக்கு உதவியாக இருக்கும். ஐடிஆர் இல்லதரிசியின் வருமான நிலையின் ஆதாரமாகவும் விசா விண்ணப்பங்களுக்கான முக்கிய ஆவணமாகவும் செயல்படுகிறது. விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை அதிகரிக்கவும் உதவும்.

NIL ITR தாக்கல்:

வருமானம் இல்லாவிட்டாலும், சில சூழ்நிலைகளில் NIL ITR தாக்கல் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் அவர் பேரில் எந்த வருமானமும் இல்லை என்று உறுதிசெய்யலாம். அரசு தரப்பு சலுகைகள் பெற இந்த விண்ணப்பம் பெரிய ஆதாரமாக மாறும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News