Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 6, 2023

மூட்டுகளில் சத்தம் வருகிறதா?? அப்படி என்றால் இந்த 3 பொருட்களை சாப்பிடுங்கள்!!

உங்களுடைய மூட்டு முழங்காலில் இருந்து டக் டக் என்று சத்தம் வருகிறதா அப்படி என்றால் இந்த மூன்று பொருட்களை உடனடியாக நீங்கள் உண்ண வேண்டும்.

நடக்கும்போது காலில் டக் டக் என்று சத்தம் வரும். இது என்னவென்று தெரியாமல் சில பேர் இதனால் மிகவும் பயப்படுகிறார்கள். இதைத்தான் மருத்துவத்தில் ஜாயிண்ட் க்ரிப்டேஷன் என்று கூறுவோம்.

இந்த சத்தம் வருவதற்கு காரணம் நம்முடைய ஜாயிண்டில் லூப்ரிகன் என்று ஒரு பதார்த்தம் இருக்கிறது. இதில் காற்று சேர்வதால் நடக்கும் போது இந்த சத்தம் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினையை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் பெரிய பிரச்சனையான கீழ்வாதம் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

எனவே மூட்டுகளில் முழங்காலில் நாம் நடக்கும் பொழுது இந்த டக் டக் சத்தம் வராமல் அதை சரி செய்வதற்கு தேவையான ஒரு மூன்று பொருட்களை பற்றி இங்கு பார்ப்போம். இந்த மூன்று பொருட்களை உண்பதால் இந்த பிரச்சனை உடனடியாக சரியாகி விடுகிறது.

1. வெந்தயம்

யாருக்கெல்லாம் இவ்வாறு நடக்கும் போது மூட்டுகளில் சத்தம் ஏற்படுகிறதோ அவர்கள் நிச்சயமாக வெந்தயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்தயத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மூட்டுகளில் ஏற்படக்கூடிய வலி வீக்கம் மற்றும் வாதத்தை முற்றிலுமாக குறைக்க முடியும்.

தினமும் இரவு ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து விடவும். பிறகு மறுநாள் காலையில் இந்த தண்ணீரை சிறிது நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து விடவும். மேலும் இரவு முழுவதும் ஊறிய அந்த வெந்தயத்தை நன்கு பற்களால் மென்று சாப்பிடவும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் சருமத்தில் அலர்ஜி இருப்பவர்கள் இந்த வெந்தயத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

2. பால்

மூட்டுகளில் இந்த பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒரு கிளாஸ் அளவு பாலை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். நமது மூட்டுகளில் இருக்கக்கூடிய லூப்ரிகன்ஸ் ஜெல் குறைவதால் தான் இது போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. எனவே பாலை தொடர்ந்து குடித்து வர இந்த பிரச்சனை சரியாகி மூட்டுகளில் வரக்கூடிய சத்தம் நீங்கும்.

மேலும் பாலை தொடர்ந்து குடிப்பதால் நம் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கிறது. இந்த பாலுடன் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து குடித்தால் நம் உடலுக்கு இரண்டு மடங்கு ஆற்றல் கிடைக்கும். சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் என எந்த பிரச்சினைகள் இருந்தாலும் இந்த பாலை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளவும்.

பாலை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும் குதிங்கால் வலி மூட்டு வலி, முழங்கால் வலி என உடலில் இருக்கக்கூடிய அனைத்து வலிகளும் உடனடியாக சரியாகும்.

3. வருத்த உப்புக்கடலை & வெல்லம்

இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் இருக்கக்கூடிய வலி வீக்கம் டக் டக் என்ற சத்தம் என அனைத்துமே சரியாகும். இதனுடன் நம் உடலுக்கு கார்போஹைட்ரேட் புரோட்டின் அயன் போன்ற சத்துக்களும் கிடைக்கும்.

எனவே தினமும் ஒரு கைப்பிடி அளவு உப்புக்கடலை மற்றும் ஒரு எலுமிச்சை பழ அளவுக்கு வெள்ளம் எடுத்துக் கொள்ள இது போன்ற மூட்டு வலி வீக்கம் வாதம் மூட்டுகளில் நடக்கும் போது சத்தம் என அனைத்துமே உடனடியாக குணமாகும்.

எனவே தினமும் இன்று இந்த மூன்று பொருட்களையும் தவறாமல் சாப்பிட்டு வர மூட்டுகளில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக சரியாகி உடல் ஆரோக்கியமாக காணப்படும்.

No comments:

Post a Comment