Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 11, 2023

'தினமும் 4,000 ஸ்டெப்ஸ் நடந்தால், மரணத்தை தள்ளி போடலாம்'


தினமும் 4,000 அடிகள் நடப்போர், மரணம் முதல் இதய நோய் பாதிப்பு வரை தள்ளி போடலாமென போலந்து மருத்துவ பல்கலை நடத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

போலந்தில் உள்ள லாட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம், சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் பேரின் தரவுகளை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:-'அதிக தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. ஒருவர் இவ்வளவு தூரம் தான் நடக்க வேண்டுமென்பதற்கு உச்சபட்ச அளவீடுகள் இல்லை.இருப்பினும், இது உங்கள் உடல் திறன் மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்தது.இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, தினமும் 2,337 அடிகள் நடப்பது, அதாவது 25 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியமானது. மிகவும் முக்கியமான ஒன்று, இளம்வயதில் ஏற்படும் மரணத்தை தடுக்க, தினமும் 3,967 அடிகள் நடப்பது, அதாவது 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது அவசியம்.

ஒவ்வொரு 1,000 அடிகள் அதிகரிப்பிற்கும், 15 சதவீதம் அளவுக்கு அபாயம் குறைகிறது. 60 வயதிற்கு மேற்பட்டோர் எனில், தினமும் 6,000 முதல் 10,000 அடிகள் நடப்போருக்கு, அதே வயதுடைய நடைப்பயிற்சி மேற்கொள்ளாதவர்களோடு ஒப்பிடுகையில்,42 சதவீதம் அபாயம் குறைவாக இருக்கும். இது ஆண், பெண் என இருபாலினத்துக்கும் பொருந்தும்.'இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உட்கார்ந்த வாழ்க்கை முறை, பல்வேறு நோய் பாதிப்புக்கு மூல காரணமாக விளங்குகிறது. உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளாதோருக்கு, டைப் 2 நீரிழிவு, இதய பாதிப்பு, புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய் பாதிப்பு அபாயம் அதிகரிக்கிறது.

நடையை அதிகரிக்க, லிப்ட் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து, மாடிப்படிகளில் நடந்து செல்லலாம். பார்க்கிங்கில் வாகனங்களை சற்று தூரமாக நிறுத்தி விட்டு, அலுவலகத்திற்கு நடந்து செல்லலாம். மொபைல் போனில் பேசும் நேரங்களில், சற்று நடக்க முயற்சிக்கலாம். மதிய உணவுக்கு பிறகு, சிறிது நடப்பது செரிமானத்தை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment