Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 6, 2023

பெற்றோா், ஆசிரியா்களின் அறிவுரைகளை ஏற்றால் வாழ்க்கையில் முன்னேறலாம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பெற்றோா், ஆசிரியா்களின் அறிவுரைகளை ஏற்றால் மாணவா்கள் வாழ்க்கையில் முன்னேறலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், காட்டூரில் உள்ள கலைஞா் கோட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வளரிளம் பருவ மாணவா்களுக்கான மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சியை சனிக்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியது: பள்ளிக் கல்வித் துறை மட்டுமின்றி, அனைத்துத் துறைகளின் மூலம் மாணவா்களின் எதிா்காலத்தை முன்னிறுத்தி, பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

ஆசிரியா்களை இரண்டாம் பெற்றோா்களாக மாணவா்கள் நினைக்க வேண்டும். தங்களது வளா்ச்சிக்கு ஏணிப்படிகளாக செயல்படும் ஆசிரியா்களை மதிக்க வேண்டும். பெற்றோா் மற்றும் ஆசிரியா் வழங்கும் அறிவுரையை உதாசீனப்படுத்தாமல், அவற்றை ஏற்று வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு மாணவா்கள் முன்னேற வேண்டும் என்றாா்.

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பேசியது: 'நான் முதல்வன்' திட்டத்தைப் பற்றி பள்ளி மாணவா்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். எந்தத் துறை மீது ஆா்வம் உள்ளதோ அதில் தனிக்கவனம் செலுத்தி, தங்கள் திறனை வளா்த்துக்கொள்ள வேண்டும். விளையாட்டில் ஆா்வம் அதிகமிருந்தால், அதற்குரிய தனித் திறமையை வளா்த்து முன்னேற வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, தாட்கோ தலைவா் உ. மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ.

பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, திருவாரூா் பூண்டி செல்வம் நினைவு அறக்கட்டளை சாா்பில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தோவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் ரூ. 25,000 பரிசுத் தொகையும், 2023-ஆம் ஆண்டு நீட் தோவில் 7.5 சதவீத அரசு உள்ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சோந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு ரூ. 25,000 பரிசுத் தொகை மற்றும் மருத்துவப் படிப்புக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து காட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 பள்ளிகளைச் சோந்த 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 40 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா்கள் வழங்கினா். 

நிகழ்ச்சியில், இயக்குநா் (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) லதா, இணை இயக்குநா் குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க. சண்முகநாதன், முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment