திருக்குறள் :
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
விளக்கம்:
இரண்டொழுக்க பண்புகள் :
1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.
2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.
பொன்மொழி :
உங்களை கையாள, உங்கள் மூளையை பயன்படுத்தவும்; மற்றவர்களைக் கையாள, உங்கள் இதயத்தைப் பயன்படுத்தவும்.” – எலினோர் ரூஸ்வெல்ட்
பொது அறிவு :
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
உளுத்தம் பருப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.
நீதிக்கதை
ஒரு கிராமத்தில் மழை இன்மையால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் தண்ணீர் பஞ்சம் போக்க என்ன செய்யலாம் என்று யோசித்து ஊரின் வாலிபர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து இருக்கும் கிணறுகளை ஆழமாக வெட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் படியே நான்கு குழுவினரும் கிணறுகளை ஆழமாகத் தோண்டினர். எனினும், அவற்றில் நீர் சுரப்பதற்கான அறிகுறியே இல்லை. அவர்கள் அனைவரும் களைத்துப் போய் விட்டனர்; நீரைக் காணாது சோர்வும் அடைந்தனர். நேரம் ஆக ஆக அவர்களின் நம்பிக்கை குறையவே, மூன்று குழுவினர் கிணறு தோண்டும் முயற்சியைக் கைவிட்டனர். ஆனால், ஆலன், ஆறுமுகம், முகமது, டேவிட் ஆகிய நால்வரும் முயற்சியைக் கைவிடவில்லை. அவர்கள் மனவுறுதியுடன் தொடர்ந்து தோண்டினர். ஊர்மக்களோ"நீர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
மேலே வந்துவிடுங்கள்; என்று வேண்டினர். அவர்கள் நால்வரும் தோண்டிய கிணற்றில் திடீரென்று நீர் ஊற்று தென்பட்டது. மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அந்த நால்வருக்கும் மக்கள் நன்றி கூறினர். எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்கக் கூடாது என்ற மன உறுதிதான் வெற்றிக்கு வழிவகுத்தது.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment