Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 12, 2023

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட 57 லட்சம் விண்ணப்பங்கள்... காரணம் இதுதான் - வெளியான தகவல்!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.

 
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் மூன்று லட்சம் பேர் அரசு பணியில் இருக்கும் மகளிர் என்பதால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, ஆண்டிற்கு 3 ஆயிரத்து 600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் மகளிரும் விண்ணப்பத்திருந்ததாக கூறப்படுகிறது

மேலும், சொந்தமாக கார் வைத்துள்ளவர்களும் விண்ணப்பத்திருந்த நிலையில், அவர்களது விண்ணப்பம் நிகாரிக்கப்பட்டுள்ளது.


மனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட மகளிருக்கு அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment