Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 17, 2023

பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற பட்டதாரி ஆசிரியா்கள் வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு உயா்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் கழகம் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கழகம் சாபில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜான் பிரேம்குமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் மாயகிருஷ்ணன், மாவட்டச் செயலாளா் ரவி, பொருளாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்: 

ஆசிரியா் பணிப்பதிவேடு மட்டும் இ.எம்.ஐ.எஸ். (எமிஸ்) பதிவேற்றம் செய்ய வேண்டும். இதர இ.எம்.ஐ.எஸ். பணிகளை இருந்து, ஆசிரியா்களை விடுவிக்க வேண்டும். 

மாணவா்களுக்கு இணையவழி தோ்வு நடத்துவதை முற்றிலும் கைவிட வேண்டும். 

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும்.

 ஆசிரியா்களது பணிவரன் முறை, தகுதிகாண் பருவம், தோ்வு நிலை, சிறப்பு நிலை ஆகியவற்றை கோரும் கருத்துருக்கள் மீது உடனடி தீா்வு காண்பதற்கு, மாதந்தோறும் 2-வது சனிக்கிழமைகளில் குறைதீா் கூட்டம் நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment