Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 6, 2023

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம். புதிய விதிமுறைகள். மாநில அரசு அறிவிப்பு.!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

அதன் பிறகு புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் பல உள்ளிட்ட பலன்கள் தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் குறிப்பிட்ட சில விதிமுறைகளுடன் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

கடந்த 25ஆம் ஆண்டுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டங்களை வழங்க வேண்டும் எனவும் 28 துறைகளில் 35 பிரிவுகள் முழுமை அடையாமல் இருப்பதாகவும் செப்டம்பர் 12ஆம் தேதிக்குள் அனைத்து துறைகளும் தேர்வு செய்யப்பட பணியாளர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment