Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 10, 2023

பிரபல கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி; ஊதியம் எவ்வளவு தெரியுமா? விண்ணப்பிப்பது எப்படி?

அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரி (Arulmigu Palaniandavar College of Arts and Culture - APCAC) காலியாக உள்ள உதவி பேராசிரியர், ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு விண்னப்பிக்க அடுத்த மாதம் 9-ம் தேதி கடைசி தேதியாகும்

பணி விவரம்

உதவி பேராசிரியர்

ஆய்வக உதவியாளர்

துறை விவரம்:

வணிகவியல்

இந்திய கலாச்சாரம்

பொருளாதாரம்

விலங்கியல்

ஆங்கிலம்

வரலாறு

இயற்பியல்

பணியிடம்

இதற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர்.

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் சம்பந்தப்பட்ட துறை முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்.டி. படித்திருக்க வேண்டும்.

NET/SLET/SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி- 09.10.2023

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Secretary,

Arulmigu Palaniandavar College of Arts and Culture,

Plani, -624 601

இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்காணல் குறித்த தகவல் அனுப்பப்படும்.

****

டெல்லி காவல் துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் (The Staff Selection Commission) வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

கான்ஸ்டபிள் (ஆண், பெண்)

பெண்கள் -2,491

மொத்த பணியிடங்கள் - 7547

எப்படி விண்ணபிப்பது?

https://ssc.nic.in - என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

இதற்கான விண்ணப்பக் கட்டணமா ரூ.100 செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியில் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; LMV பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

இதற்கு விண்ணப்பிக்க 01.07.2023 படி 18 வயது நிரம்பியவர்களாகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
home page- ல் Apply என்பதை .
SSC Constable Post’, Apply என்பதை
முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும்
ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்
புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவற்றுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் உடற்தகுதி தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

முழு விவரம் அறிய

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Final_Notice_CEDP2023_01092023.pdf - என்ற லிங்கை .

எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2023

முக்கியமான நாட்கள்:


ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் - 30.09.2023 - இரவு 11 மணி வரை

விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய கடைசி நாள் - 30.10.2023 - 04.10.2023 இரவு 11 மணி வரை

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - டிசம்பர், 2023 (எழுத்துத் தேர்வு தேதி குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.)
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment