சங்கங்கள் கோரிக்கைக்காகப் போராட அலுவலரிடம் அனுமதி வாங்க வேண்டும் - DEO!
இச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெறும்வரை இதனைக் கண்டித்து தொடர் போராட்டம் நடைபெறும் - TNPTF
-- -- -- --
வன்மையாகக் கண்டிக்கின்றோம்....
ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் விதமாகப் போராடுவதற்கு அதிகாரிகளின் அனுமதிபெற வேண்டும் என்று ஆணை பிறப்பித்த விருதுநகர் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களை TNPTF விருதுநகர் மாவட்டக்கிளையின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஜனநாயக நாட்டில் எவ்வித அனுமதியுமில்லாமல் கோரிக்கைகள் நிறைவேற ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்களையே எதிர்த்துப் போராடும் காலத்தில்....
போராட அதிகாரிகளின் அனுமதிபெற வேண்டும் என்று ஆணையிடும் விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல் வெட்கக்கேடு....
உடனே வாபஸ் வாங்கு!
வாபஸ் வாங்கும்வரை தொடர் போராட்டம்
முதல் கட்டமாக...
கண்டன ஆர்ப்பாட்டம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நாள் : 04.09.2023 திங்கள் மாலை 5 மணி
இடம்: மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி)
சுப்பையா நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகம்
விருதுநகர்
TNPTF,விருநகர் மாவட்டம்
No comments:
Post a Comment