Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 8, 2023

எந்த தேர்வும் கிடையாது: அரசு போக்குவரத்துக் கழகத்தில் 335 காலியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்

மிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயந்திரவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்ளுக்கு ஒரு வருட தொழில் பழகுநர் பயிற்சி காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரம்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்பட்டப்படிப்பு தொழில் பழகுநர் பயிற்சிபட்டயபடிப்பு தொழில் பழகுநர் பயிற்சிமொத்த காலியிடங்கள்
விழுப்புரம் மண்டலம்702696
கோயம்பத்தூர் மண்டலம்346296
நாகராக்கோயில் மண்டலம்301040
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து222244
சேலம் மண்டலம்092029
எம்டிசி - சென்னை101727
தருமபுரி மண்டலம்022123
திருநெல்வேலி மண்டலம்070714
மொத்தம்150185335



பொறியியல் துறை அல்லாதோர் தொழில் பழகுநர் பயிற்சி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்பட்டப்படிப்பு தொழிற்பயிற்சி
நாகர்கோயில்20
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்09
திருநெல்வேலி53
மொத்தம்82



கல்வி தகுதி: பட்டப்படிப்பு தொழில் பழகுநர் பயிற்சி காலியிடத்திற்கு விண்ணப்பிக்க இயந்திரவியல், தானியியங்கிவியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டயப்படிப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தொடர்புடைய துறைகளில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் துறை அல்லாதோர் பிரிவுக்கு பிஏ/பி எஸ்சி.,/ பி.காம்/ பிபிஏ/ பிசிஏ ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2019, 2020, 2021, 202, 2023 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்டுள்ளபடி கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதியின் அடிப்படையில் குறைந்த பட்ச உதவித் தொகை நிர்ணயிக்கப்படும். அதன்படி, பட்டப்படிப்பு தொழில் பழகுநர் பயிற்சி பதவிக்கு மாத உதவித் தொகையாக ரூ. 9000 வழங்கப்படும். பட்டயப்படிப்பு காலியிடத்திற்கு மாத உதவித் தொகையாக ரூ. 8000 வழங்கப்படும். பொறியியல் துறை அல்லாதோர் பட்டபடிப்பு காலியிடத்திற்கு மாதம் ரூ. 9000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

:₹58,000 வரை சம்பளம்... எந்த தேர்வும் இல்லை... பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கும் அரசு வேலை!

தேர்வு முறை: இதற்கு எவ்வித எழுத்துத் தேர்வும் நடத்தப்படாது. அந்தந்த பதவிக்கு கோரப்பட்ட குறைந்தபட்ச கல்வி தகுதியில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். https://boat-srp.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் அக்டோபர் 10 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆள்சேர்க்கை அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment