Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 1, 2023

இந்தியா மேப்பில் இலங்கையையும் ஏன் இருக்கிறது தெரியுமா? - பலருக்கும் தெரியாத தகவல் இதோ!

வாழ்க்கையில் தினசரி எத்தனையோ விஷயங்களை நாம் கடந்து வருகிறோம். சாதாரணமாக நாம் கடக்கும் பல விஷயங்களில் உள்ள சுவாரசியங்கள், காரண காரியங்கள் பற்றி நாம் சிந்திப்பது இல்லை.

இன்று நாம் அத்தகைய ஒரு கேள்வியை தான் உங்கள் முன்வைத்து உங்களை சிந்திக்க வைக்க உள்ளோம். சிறுவயதில் இருந்தே இந்திய வரைபடத்தைப் பார்த்து வருகிறோம். அந்த வரைபடத்தில் நாட்டின் எந்தப் பகுதியில் எந்த மாநிலம் இருக்கிறது என்று மார்க் பண்ண சொல்வார்கள்.

இந்திய எல்லையை அழகாக வடிவமைத்து கொடுத்திருக்கும் படத்தில் பாகிஸ்தானோ நேபாளமோ எல்லைகள் குறிக்கப்பட்டு இருக்காது. ஆனால் பல தசாப்தங்களாக இந்த வரைபடத்தில் இலங்கை நாட்டின் குறியீட்டை பார்த்திருப்போம். இலங்கை என்பது தனி நாடு அதன் மேல் இந்தியாவிற்கு எந்த உரிமையோ அதிகாரமோ கிடையாது. பின் எதற்காக இலங்கை இந்திய வரைபடத்தில் உள்ளது எண்டு எப்போதாவது சிந்ததுண்டா? அதை பற்றி தான் இப்பொது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

இந்திய வரைபடத்துடன் இலங்கையை உத்தியோகபூர்வமாக காண்பிப்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கிடைக்கவில்லை .ஆனால் இது தொடர்பான பல சுவாரஸ்யமான தகவல்கள் Quora இணையதளத்தில் காணப்பட்டன. இங்கிருந்து சில தகவல்களைத் தருகிறோம்.

Quora பயனர் ஷியாம் சிங், தன்னை ஒரு கல்வியாளர் என்று குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும்போது இலங்கையை இந்திய வரைபடத்துடன் காட்டுவதற்குக் காரணம் கடல்சார் சட்டம் என்கிறார். இலங்கையை இந்திய வரைபடத்துடன் காட்டவில்லை என்றால், அது சட்டத்தை மீறியதாக இருக்கும். இந்த காரணத்திற்காக, இந்தியாவின் ஒவ்வொரு அதிகாரப்பூர்வ வரைபடத்திலும் இலங்கை காட்டப்பட்டுள்ளது.

கடல்சார் சட்டம்

கடல்சார் சட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி எந்த நாட்டின் எல்லையும் கடலுடன் இணைக்கப்பட்டிருந்தால் அந்த நாட்டின் எல்லை கடலில் 200 நாட்டிக்கல் மைல் அதாவது சுமார் 370 கி.மீ வரை நீண்டு இருக்கும். இந்த பகுதியில் சம்பந்தப்பட்ட நாட்டின் கடற்படையினர் குவிக்கப்படுவர். அந்த இடத்தில் உள்ள தீவுகள், கட்டமைப்புகள் அவர்களது வரைபடத்தில் இருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் இலங்கையும் இந்தியாவின் இந்தக் கடல் எல்லைக்குள் வருகிறது. உண்மையில் இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு 18 கி.மீ தூரம் மட்டுமே உள்ளது. இதன்காரணமாக, கடல் சட்டத்தின்படி, இந்தியாவும் தனது வரைபடத்தில் இலங்கையைக் காட்டுவது கட்டாயமாகிறது.

1956 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை கடல் சட்டம் தொடர்பான முன்மொழிவை ஏற்றுக்கொண்டது. இந்த மாநாட்டில் பல நாடுகள் பங்கேற்றன. இந்த மாநாட்டில், கடல் எல்லை மற்றும் அது தொடர்பான அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்தும் பரந்த அளவிலான விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு இந்த விவாதம் பல நாட்கள் தொடர்ந்தது. பின்னர் 1973 மற்றும் 1982 க்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தில் இந்த சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில் பல கடல்சார் சட்டங்களும் அங்கீகரிக்கப்பட்டன. இந்தச் சட்டங்களின்படி, ஒரு நாடு கடல் பகுதியில் 200 நாட்டிகல் மைல் தூரம் வரையிலான விஷயங்களை அதன் மேப்களில் காட்டுவது கட்டாயமாகும். அத்தகைய சூழ்நிலையில், இலங்கையும் இந்தியாவின் கடல்சார் களத்தின் கீழ் வருகிறது, எனவே அது வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment