Sunday, January 28, 2024

பாஸ்ட் டாக்கில் வந்தது அதிரடி மாற்றம்!

தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது.

இதற்காக FASTags எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்று இங்கே பார்க்கலாம். இதற்காக FasTag மாற்றங்களை செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை KYC முழுமையடையாத FASTags களை செயல் இழக்க வைக்க முடிவு செய்துள்ளது. இவை ஜனவரி 31, 2024 க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்க செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு வாகனத்திற்கு. இனிமேல் ஒரு FasTagகள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


அதேபோல் ஒரே பாஸ்ட் டாக்கை ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி பயன்படுத்தப்படும் பழைய பாஸ்ட் டாக்குகள் ஜனவரி 31க்குப் பிறகு செயலிழக்கச் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

எப்படி அப்டேட் செய்வது?: இதற்காக FASTags எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

வங்கியுடன் இணைக்கப்பட்ட FASTag இணையதளத்தைப் பார்வையிடவும். தேவையான பக்கத்தை அணுக, 'FASTag' என்ற சொல்லை கூகுள் செய்யலாம்.

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்

அங்கே உள்ள "எனது சுயவிவரம்" என்ற பகுதிக்குச் சென்று KYC தாவலைக் கிளிக் செய்யவும்

முகவரிச் சான்று மற்றும் மற்ற விவரங்கள் உள்ளிட்ட தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு அப்டேட் கொடுக்கவும்.

அந்த பகுதியில் நீங்கள் அப்டேட் செய்த KYC காட்டப்படும்.

உங்கள் FASTag நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?

நீங்கள் fastag.ihmcl.com என்ற பிரத்யேக இணையதளத்தில் இதை சோதனை செய்யலாம்:

இணையப் பக்கம் திறக்கும் போது, ​​இணையதளத்தின் வலது மேற்புறத்தில் உள்ள உள்நுழைவை கிளிக் செய்ய வேண்டும்

உள்நுழைய OTP வரக்கூடிய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வழங்க வேண்டும்

உள்நுழைந்த பிறகு, டாஷ்போர்டில் உள்ள சுயவிவரப் பகுதியைக் கிளிக் செய்யவும்

சுயவிவரப் பிரிவில், உங்கள் FASTag இன் KYC நிலை மற்றும் பதிவுச் செயல்பாட்டின் போது சமர்ப்பிக்கப்பட்ட சுயவிவர விவரங்கள் ஆகியவற்றைப் சோதனை செய்யலாம்

உங்கள் FASTag இணைக்கப்பட்ட வங்கியின் இணையதளத்திலும் இதைச் செய்யலாம்.

FAStag KYC ஐ முடிக்க தேவையான ஆவணங்கள்:

வாகனத்தின் பதிவு சான்றிதழ்

அடையாளச் சான்று

முகவரி ஆதாரம்

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் பான் கார்டு ஆகியவை அடையாள மற்றும் முகவரிச் சான்றாகப் பயன்படுத்தப்படலாம்.

டோல்: இது போக விரைவில், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பது, பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மார்ச், 2024க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

சுங்கச்சாவடி: சமீபத்தில், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு காலத்தை குறைப்பது மற்றும் துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி நேரத்தை எளிதாக்குவது போன்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து இந்தியா உலக வங்கியிடம் பல விவரங்களை தெரிவித்தது. FASTag செயல்படுத்தப்பட்டதன் மூலம், சுங்கச்சாவடிகளில் சராசரி காத்திருப்பு நேரம் வியத்தகு முறையில் குறைந்துள்ளது. தற்போது காத்திருப்பு நேரம் வெறும் 47 வினாடிகளாகக் குறைந்துள்ளது, இது முந்தைய 714-வினாடி காத்திருப்பில் இருந்து கணிசமான முன்னேற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலக வங்கி பிரதிநிதிகளுடனான சமீபத்திய கலந்துரையாடலில், மத்திய அரசாங்கம் நாட்டின் உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான அதன் திட்டங்களை குறிப்பிட்டது. நவம்பர் இறுதி வரை, இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமானம் மற்றும் விரிவாக்கம் புதிய உச்சத்தை அடைந்து உள்ளது.

வேகம்: மேலும், இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் மக்கள் செல்லும் சராசரி வேகத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வாகனங்களுக்கான வேக வரம்பு கடைசியாக ஏப்ரல் 2018 இல் புதுப்பிக்கப்பட்டது. தற்போது, ​​நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக 100 கிமீ வேகத்திலும், எக்ஸ்பிரஸ்வேயில் மணிக்கு 120 கிமீ வேகத்திலும் கார்கள் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. நகர்ப்புற சாலைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ அனுமதிக்கப்படுகிறது. அதே சமயம் சராசரி வேகம் 70 கிமீ என்ற அளவில் தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ளது.

அதாவது 100 கிமீ அனுமதிக்கப்பட்டால் சாலை தரம், தடுப்புகள் காரணமாக சராசரி வேகம் 70 கிமீ ஆக உள்ளது. இதை 85 ஆக உயர்த்த.. அதாவது வாகனங்கள் சராசரியாக செல்லும் வேகத்தை அதிகரிக்க சாலைகளில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News