Friday, June 14, 2024

பணி நிரவல் கலந்தாய்வு - ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் விவரம்

கீழ்கண்ட விதிகளின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்று ஆணை பெற்ற ஆசிரியர்கள் G.O: 176 இன் படி 3 ஆண்டுகளுக்கு எந்தவித பணி நிரவல்களிலும் வர மாட்டார்கள். பள்ளியில் உபரி ஏற்பட்டாலும் அவர்கள் மூன்றாண்டுகளுக்கு அதே பள்ளியில் பணிபுரிவார்கள்.

தொடக்கக் கல்வித் துறையில் அரசாணை- 243 அமலுக்கு வந்துவிட்டது. அதன்படியே இன்றைக்கு 13.06.2024 முதன்முதலில் பணியில் சேர்ந்த நாளை ( STATE SENIORITY ) அடிப்படையாகக் கொண்டு ஒன்றிய அளவில் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது.

இனி பதவி உயர்விலும் மாநில முன்னுரிமை (STATE SENIORITY) அடிப்படையிலேயே வழங்கப்படும் என தெரிகிறது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News