Friday, June 14, 2024

இதை செய்தால் இனி ஆயுசுக்கும் முழங்கால் மூட்டு வலி பிரச்சனையே இருக்காது!!

நமது இயற்கையானது பல மூலிகைகளை மருந்தாக பயன்படுத்த கொடுத்துள்ளது.

இதனை நாம் முறையாக பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வை வாழலாம். அந்த வகையில் இயற்கையின் வரப்பிரசாதத்தின் ஒன்றுதான் கற்பூரவள்ளி இலை. இதனை நாம் பலவகை பயன்பாட்டுகளுக்கு உபயோகிக்கலாம். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை வெறுமனே சாப்பிடலாம்.

சளி காய்ச்சல் தொண்டை கரகரப்பு உள்ளவர்கள் இதனை இரண்டு இலைகள் சாப்பிட்டால் போதும் அனைத்தும் நிவர்த்தி ஆகும். இதற்கு அடுத்தபடியாக 30 வயதில் கடந்து விட்டாலே அனைவருக்கும் மூட்டு கை கால் வலி மூட்டு தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்களும் கற்பூரவள்ளி இலையை உபயோகிக்கலாம்.

ஒற்றைத் தலைவலி:

ஒற்றை தலைவலியாய் பலரும் அவதிப்படுவதுண்டு. அவ்வாறு இருப்பவர்கள் இதனுடைய இரண்டு இலைகளை எடுத்து அதிலுள்ள சாற்றை கொண்டு தலையில் மசாஜ் செய்து வர வலி உடனடியாக நீங்கும்.

மூட்டு வலி நீங்க டிப்ஸ்:

மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் இதனுடைய 5 இலைகளை பறித்து கொண்டு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை வலி இருக்கும் இடத்தில் பத்து போல் போட வேண்டும்.
இவர் செய்து வர முழங்கால் மூட்டு வலி குணமாகும்.

அதுமட்டுமின்றி இதில் ஆண்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளதால் இதனை நன்றாக கொதிக்க வைத்து சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வர செரிமான பிரச்சனை முற்றிலும் குணமாகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News