Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 1, 2024

மாநில கல்விக்கொள்கை ஆய்வு அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு - முக்கிய அம்சங்கள் :



மாநில கல்விக்கொள்கை ஆய்வு அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

முக்கிய அம்சங்கள் :👇👇👇


* தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் TET தேர்வை கடுமையாக்க மாநில கல்வி கொள்கையில் பரிந்துரை...

* 3 , 5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக , மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்தார் . இக்குழு பொதுமக்களிடம் கருத்து பெற்று விரிவான அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது . அதில் , 3 , 5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும் , தமிழ் , ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.

* நீட் தேர்வு வேண்டாம் - மாநில கல்விக்கொள்கை ஆய்வறிக்கை

* இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும்.

* கல்லூரிகளில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது. 11ம் வகுப்பு மதிப்பெண்களையும் சேர்க்க வேண்டும்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment