மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
அல்சர்
வயிற்றின் மேல்புறத்தில் சிறு குடலில் ஏற்படும் புண்களே அல்சர் என்று அழைக்கப்படுகிறது. அல்சர் இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். இதுவே பொதுவான அறிகுறியாகும்.
கேஸ்டரிக் அல்சர் என்பது வயிற்றுக்கு உள்ளே வருகிறது.
டியோடெனல் அல்சர் என்பது உங்கள் சிறுகுடலின் மேல் பகுதியில் ஏற்படுகிறது.
அல்சரின் அறிகுறிகள்
வயிறு எரிச்சல்
வயிறு வலி
வயிறு உப்புசம், வயிறு நிறைந்த உணர்வு
கொழுப்பு உணவுகளை ஏற்காமை
நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் ஆகிய அறிகுறிகள் தோன்றும்.
தீவிர அல்சர் பிரச்னைகள் ஏற்பட்டால்
வாந்தி
ரத்த வாந்தி,
கருப்பாக மலம் கழித்தல்,
மூச்சுத்திணறல்
மயக்கம்
சோர்வு
வாந்தி
உடல் எடையிழப்பு
பசியின்மை
பசியில் மாற்றம்
எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?
உங்களுக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாகும்போது, உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே அல்சருக்கு நல்லது. நீங்களாகவே செரிமான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும்.
வயிற்றின் வலது புறத்தில் வலி இருந்தால், மேல்புறம் வலி இருந்தால், ஃபேட்டி லிவர் அல்லது பித்தப்பை கற்களால் ஏற்படலாம். அடிவயிறு வலி இருந்தால், பெண்களுக்கு கருப்பை பிரச்னைகளாகவும், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் பிரச்னைகளாகவும் இருக்கலாம்.
அல்சர் இருப்பவர்களுக்கு மேல் வயிற்றில் நடுப்பகுதியில் வலி இருக்கும். கடும் அல்சராக இருந்தால், வயிற்றுக்குள் இருக்கக்கூடிய புண் கடுமையாகி உள்ளே ரத்தக்கசிவு ஏற்பட்டு, மலம் கருப்பாகிவிடும்.
ஆனால் நாம் வயிறு வலித்தாலே அதை ஒட்டுமொத்தமாக வயிறு வலி என்றே குறிப்பிடுகிறோம். இந்த அல்சரை குணப்படுத்த வீட்டிலே நீங்கள் இந்த எளிய பானத்தை தயாரிக்க முடியும். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் - ஒரு கப்
நாட்டுச்சர்க்கரை - அரை ஸ்பூன்
ஏலக்காய் - இரண்டு சிட்டிகை
செய்முறை
தேங்காய்த்துருவலை மிக்ஸியில் சேர்த்து அடித்து பால் பிழிந்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் நீங்கள் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஏலக்காயை சேர்த்து கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகிவிடவேண்டும். இதை பருகுவதால் உங்கள் வயிறு முதல் வாய் வரை உள்ள புண்கள் குணமாகும். இதை ஓரிரு நாட்கள் பருகினால் பத்தாது.
ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை உங்கள் வயிறுக்கு இதமளிக்கும் வரை பருகவேண்டும். இதை வயிற்றில் எப்போதெல்லாம் உங்களுக்கு உபாதைகள் உள்ளதோ அப்போதெல்லாம் பருகி பலன்பெறுங்கள். இந்த எளிய பானத்தை நீங்கள் தயாரிப்பது மிகவும் எளிது. வீட்டிலேயே செய்துவிட முடியும். பருகி பலன்பெறுங்கள்.
No comments:
Post a Comment