காலம் காலமாக சொரி, சிரங்கு, தேமல் போன்ற நோய்களுக்கு நம் முன்னோர்கள் இயற்கை வைத்தியத்தின் மூலமாக அதனை குணப்படுத்தி வந்தனர், ஆனால் இன்றைய காலகட்டத்தில் சொரி, சிரங்கு, தேமல் போன்ற நோய்கள் ஏற்பட்டால் இயற்கை முறையில் அதனை நிவர்த்தி செய்யாமல் உடனடியை மருத்துவரை நோக்கி செல்வது வழக்கமாக இருக்கிறது அவர்கள் தரும் ஆங்கில வழிகாட்டலின் மூலமாகவே அந்த நோய்கள் காலதாமதமாக குணமாகிறது, ஆனால் விரைவில் உன் குணமாக வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் அருகில் உள்ள இயற்கை மூலிகை கொண்டு சொரி சிரங்கு தேமல் குணப்படுத்த முடியும்..
பூவரசு இலைகளுக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு இதன் நிலைகளை அரைத்து சொறி, சிரங்கு தேமல் போன்ற தோல் நோய்களுக்கு பூசினால் நல்ல பலன் கிடைக்கும் பூக்களை அரைத்து புண்கள் மீது பூசினாலும் பலன் கிடைக்கும் பூவரச காய்களில் உள்ள மஞ்சள் நிற பூக்கள் சொரி சிரங்கு தேமல் போன்ற நோய்களுக்கு பெரிதும் உதவுகிறது எச்சில் தழும்புகளுக்கும் பூசினால் குணமாகும் மேலும் பூவரச இலைகள் பூக்கள் காய் அனைத்தும் தோல் நோய்க்கு சிறந்த நிவாரணியாக இருப்பதாக நமது சித்தர்கள் குறிப்பிடுகின்றனர், சித்தர்கள் மட்டுமல்லாமல் நமது முன்னோர்களும் பூவரச இலையினை அரைத்து காயங்களுக்கு வைத்து சொரி, சிரங்கு, தேமல் மற்றும் தீக்காயங்களுக்கு வைத்து பயன்படுத்தி வருகின்றனர் இதன் மூலம் விரைவில் குணம் அடையும் என்றும் கூறியுள்ளனர்..!!
No comments:
Post a Comment